டாமி & தீபாவளி
குட்டீஸ்களுக்கு தீபாவளி வந்துவிட்டாலே குதூகலம் தான். ஒரு சில வாரங்களுக்கு முன்பே அதைப்பற்றி பேச்சு வரும். பள்ளி சென்று வரும்பொழுது, விளையாடும் பொழுது, பள்ளி வகுப்பிலும். அப்படிப் பேசிக்கொண்டு போகும் ஒருவேளையில் மணியனும் இருந்தான். டாமி இரண்டு காதுகளையும் விரப்பாக்கி கேட்டுக்கொண்டு வந்தான். "எனக்கு ஒரு துப்பாக்கி, கேப்பு, கம்பி மத்தாப்பு எங்கப்பாகிட்ட வாங்கிட்டு வர சொல்லிட்டேன்டா. போன வருஷம் மாதிரியே இந்த வருசமும் திருடன் போலீஸ் வெளயாடலாம் " "சுருள் கேப்புல தான் திருடன் போலீஸ் விளையாட முடியும். அதனால சுருள் கேப்பே வாங்கிக்கடா" "போன வருஷம் வாங்குன துப்பாக்கியே எனக்கு நல்லா இருக்கு, அதுல சுருள் கேப் மட்டும் போட்டா போதும்" "நல்லா வேலை செய்யுதான்னு பாருடா, த்ரூ இருக்கும்...தேங்கெண்ணெய் போட்டு சரி பண்ணிக்க.. இல்லான்னா வேலை செய்யாது" "நாமெல்லாம் ஆலமரத்தடிக்கு போயிடுவோம். அங்க போய் விளையாடலாம். டாமிய போலீஸா டீம்ல வெச்சுக்குவோம்." அவனுக்கு புரியவில்லை. ஆனாலும் அவன் பேரைச் சொன்னதும் காதுகளை மடக்கி, கண்ணைச் சுருக்கி, தலையை தாழ்த்தி,